நேபாளத்தில், இமயமலையின் அடிவாரத்தில், இந்திய மலையேற்ற வீரர் மாயம்

#Nepal #Missing #Human
Mani
1 year ago
நேபாளத்தில், இமயமலையின் அடிவாரத்தில்,  இந்திய மலையேற்ற வீரர் மாயம்

நேபாளம் இமயமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது, இங்குள்ள மலைகளில் பலர் மலையேற்றம் செல்கின்றனர். அந்த வகையில் இந்திய மலையேற்ற வீரர் அனுராக் மாலு நேபாளத்தில் மலையேற்றம் மேற்கொண்டிருந்தார். அனுராக் மாலு இமயமலையின் 10வது சிகரமான அன்னபூர்ணாவை அடைய திட்டமிட்டிருந்தார்.

நேற்று காலை அன்னபூர்ணா சிகரத்தை நோக்கி பயணத்தை தொடங்கிய அனுராக் மாலு தொடர்பை இழந்துள்ளார்.

இதையடுத்து, அனுராக் மாலுவை காணவில்லை என்ற தகவலை மலையேற்ற குழுவின் பொறுப்பாளர் மிங்மா ஷெர்பா வெளியிட்டார். அனுராக் மாலுவை தேடும் பணி நடந்து வருகிறது.