புதிய எல்லை நிர்ணய அறிக்கையின் அடிப்படையில் உள்ளாட்சி தேர்தலை நடத்துவதா?

#SriLanka #Lanka4 #srilankan politics #sri lanka tamil news #Election #Election Commission
Prabha Praneetha
3 years ago
புதிய எல்லை நிர்ணய அறிக்கையின் அடிப்படையில் உள்ளாட்சி தேர்தலை நடத்துவதா?

புதிய எல்லை நிர்ணய அறிக்கையின் பிரகாரம் 2023 உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவது குறித்து அரசாங்கம் ஆலோசித்து வருகிறது.

இதன் மூலம், மாநகர சபைகள், நகர சபைகள், பிரதேச சபைகள் மற்றும் மாகாண சபைகளின் உறுப்பினர்களின் எண்ணிக்கை - 8,000 க்கும் அதிகமான எண்ணிக்கையானது கிட்டத்தட்ட பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், புதிய எல்லை நிர்ணய அறிக்கையின் பிரகாரம் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்த வேண்டுமாயின், அது குறித்த பிரேரணை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட வேண்டும்.

இது தொடர்பாக ஆளுங்கட்சி உறுப்பினர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை இரத்து செய்வது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

 

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4