பொருளாதார நெருக்கடி தாங்க முடியாமல் இரண்டு பிள்ளைகளின் தந்தை ரயிலில் பாய்ந்து தற்கொலை

#Suicide #Police #economy #SriLanka #Lanka4 #sri lanka tamil news
Prathees
3 years ago
பொருளாதார நெருக்கடி தாங்க முடியாமல் இரண்டு பிள்ளைகளின் தந்தை ரயிலில் பாய்ந்து தற்கொலை

செலுத்த வேண்டிய கடன்கள் காரணமாக இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் புகையிரதத்தில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சோகச் செய்தியொன்று நிட்டம்புவ பின்னகொல்ல பிரதேசத்தில் இருந்து பதிவாகியுள்ளது.

நிட்டம்புவ பின்னகொல்ல பிரதேசத்தில் வசித்து வந்த நாற்பத்தொரு வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.

இவர் கடந்த 22 ஆம் திகதி காலை 9.10 மணியளவில் கம்பஹா மற்றும் தரல்வ புகையிரத நிலையங்களுக்கு இடையில் ரம்புக்கனையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி ஓடும் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

புகையிரதம் மோதியதில் தலை துண்டிக்கப்பட்டதுடன் உயிரிழந்தவரின் சடலமும் விபத்து இடம்பெற்ற அதே புகையிரதத்தில் கம்பஹா புகையிரத நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது.

இறந்தவரின் பணப்பையில் இறந்தவர் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் மற்றும் நண்பர்களுக்கு எழுதிய கடிதத்தையும் பொலிசார் கண்டுபிடித்தனர்.

'பதினேழு வருடங்களாக என்னுடன் எல்லா துக்கங்களையும் சந்தோஷங்களையும் சகித்துக்கொண்ட பெண் நீ.

அந்த சகிப்புத்தன்மை எனக்கு இன்னும் ஆச்சரியமாக இருக்கிறது. எனது முட்டாள்தனமான முடிவுக்கு மன்னிக்கவும். என்னால் இனி அதை தாங்க முடியாது. எனக்குத் தெரிந்தது ஒன்றே ஒன்றுதான்.

நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன்' என்று இறந்தவர் தனது மனைவிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதே கடிதத்தில் தனது மகளுக்கும் இதே போன்ற குறிப்பை எழுதியுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4