சுமத்ரா தீவுகள் அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம்: இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை

#Earthquake #tsunami
Prathees
3 years ago
சுமத்ரா தீவுகள் அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம்: இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை

இந்திய பெருங்கடலில் சுமத்ரா தீவுகள் அருகே இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய சுனாமி முன் எச்சரிக்கை மையம் அறிவித்துள்ளது.

இன்று அதிகாலை 1:30 மணியளவில் சுமத்ராவின் படாங் நகரில் இருந்து 210 கிலோமீற்றர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

அதன்படி, அதிகாலை 1:41 மணியளவில் தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டதுடன், இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு இலங்கை மக்களை அறிவித்துள்ளது.

குறித்த நிலநடுக்கம் காரணமாக இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தல் ஏதும் இல்லை என நள்ளிரவு 1:53 மணியளவில் வெளியிடப்பட்டுள்ள மற்றுமொரு அறிவிப்பில் அந்த மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, கடலுக்கு அடியில் உள்ள சாதாரண மக்களின் உயிர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தேசிய சுனாமி முன் எச்சரிக்கை மையம் உறுதி செய்துள்ளது.

தேசிய மற்றும் சர்வதேச நிறுவனங்களுடனான இணக்கப்பாட்டின் பிரகாரம் இது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் ஷிரோமணி ஜயவர்தன இது தொடர்பான மேலதிக தகவல்களைத் தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4