தக்காளிக்குப் போதிய விலை கிடைக்காததால் சுமார் 3 டன் தக்காளியை ஆற்றில் கொட்டிவிட்டுச் சென்ற விவசாயி!

#Vegetable #ImportantNews #Tamilnews #Breakingnews
Mani
3 years ago
தக்காளிக்குப் போதிய விலை கிடைக்காததால் சுமார் 3 டன் தக்காளியை ஆற்றில் கொட்டிவிட்டுச் சென்ற விவசாயி!

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனபள்ளி அருகே, போதிய விலை கிடைக்காததால், சுமார் 3 டன் தக்காளியை விவசாயி ஒருவர் ஆற்றில் கொட்டிவிட்டு சென்றார்.

பதிமடுகு என்ற கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவர், தனது தோட்டத்தில் விளைந்த தக்காளியை, கிருஷ்ணகிரி சந்தைக்கு கொண்டு சென்றார். அங்கு ஒரு கிலோ, மூன்று ரூபாய்க்கு மட்டுமே கொள்முதல் செய்யப்படும் என்று கூறியதால் அதிருப்தி அடைந்துள்ளார்.

பின்னர், தக்காளியை அப்படியே திரும்பி கொண்டு சென்று, செல்லும் வழியில் உள்ள மார்க்கண்டேயன் ஆற்றில் கொட்டிவிட்டார். அறுவடைச் செலவுக்குக் கூட இந்த விலை கட்டுபடியாகாது என்பதால் அவர் இவ்வாறு செய்திருக்கிறார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4