இன்று சௌராஷ்டிரா தமிழ் சங்கத்தில் பிரதமர் மோடி காணொலி மூலம் உரை நிகழ்த்துகிறார்.

#Prime Minister #India
Mani
1 year ago
இன்று சௌராஷ்டிரா தமிழ் சங்கத்தில் பிரதமர் மோடி காணொலி மூலம் உரை நிகழ்த்துகிறார்.

குஜராத் மாநிலத்தின் சௌராஷ்டிரா பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் பல ஆண்டுகளுக்கு முன் தமிழகத்திற்கு குடிபெயர்ந்தனர். இரு மாநிலங்களுக்கிடையிலான கலாச்சார தொடர்புகளை புதுப்பிக்க, குஜராத் மாநிலம் சோம்நாத்தில் 'சௌராஷ்டிர தமிழ் சங்கம்' என்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்வு கடந்த 17ஆம் திகதி ஆரம்பமாகி இன்றுடன் நிறைவுபெறவுள்ளதுடன், 10 நாள் நிகழ்வுகள் புதன்கிழமை நிறைவுபெறவுள்ளது.

நிறைவு நாள் நிகழ்ச்சியில் இன்று காலை 10:30 மணிக்கு வீடியோ காட்சி மூலம் பிரதமர் மோடி உரையாற்றுவார் என பிரதமர் அலுவலக அதிகாரி ஒருவர் அறிவித்துள்ளார்.