உயர் தொழில்நுட்ப ஸ்கேனருடன் பொலிஸ் அதிகாரி உட்பட 4 பேர் கைது

#Arrest #Police #Investigation #SriLanka #Lanka4 #sri lanka tamil news
Prathees
3 years ago
உயர் தொழில்நுட்ப ஸ்கேனருடன் பொலிஸ் அதிகாரி  உட்பட 4 பேர் கைது

மைதானத்தின் உட்பகுதியை ஆய்வு செய்வதற்காக பயன்படுத்தப்பட்ட அதிநவீன தொழில்நுட்ப ஸ்கேனிங் இயந்திரத்துடன் மிரிஹான பொலிஸ் பிரிவின் பிரதான பொலிஸ் பரிசோதகர் மற்றும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் வவுணதீவு முகாம் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய கரடியனாறு, காரங்காடு பிரதேசத்தில் திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

புதைக்கப்பட்ட தங்கத்தை மீட்கும் நோக்கில் இந்த ஸ்கேனிங் இயந்திரம் வைக்கப்பட்டிருக்கலாம் என பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் ருவன்வெல்ல, பெந்தோட்டை மற்றும் சியம்பலாபே வடக்கைச் சேர்ந்தவர்கள்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக கரடியனாறு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேலும் தெரிவித்தனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4