13 வயது சிறுவன் துஷ்பிரயோகம்
#SriLanka
#children
#Tamil
Prabha Praneetha
3 years ago
பாடசாலை உபகரணங்கள் வாங்கித் தருவதாக ஏமாற்றி 13 வயது சிறுவனை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவரை மொரட்டுவ - எகொடஉயன காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஹிரண பிரதேசத்தை சேர்ந்த 49 வயதுடைய ஒருவரென தெரிவிக்கப்படுகிறது.
பாதிக்கப்பட்ட சிறுவன் எகொட உயன தொடருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள கடற்கரைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சந்தேகநபரால் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே