சுவிட்சர்லாந்தில் வீட்டு உரிமையாளர்கள் தொடர்பில் முறைப்பாடு

#Complaint #swissnews #Lanka4 #Tamilnews
Prabha Praneetha
1 year ago
சுவிட்சர்லாந்தில் வீட்டு உரிமையாளர்கள் தொடர்பில் முறைப்பாடு

சுவிட்சர்லாந்து நாட்டில் வீட்டு உரிமையாளர்கள் தொடர்பாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

 வீடுகளை வாடகைக்கு வழங்கும் அனைத்து வீட்டு உரிமையாளர்கள் வாடகை குடியிருப்பாளர் உரிமைகளை மீறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

 ஒவ்வொரு வீட்டிலும் பிள்ளைகளைக் கொண்ட குடும்பங்களுக்கு வாடகைக்கு வீடுகளை வழங்க வீட்டு உரிமையாளர்கள் விரும்புவதில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

 சுவிட்சர்லாந்தில் வாடகை வீடுகளுக்கு காணப்படும் தட்டுப்பாட்டு நிலைமையினால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

 மேலும் , பிள்ளைகளுடைய குடும்பங்களுக்கு வீடு வாடகைக்கு தர மறுப்பது அடிப்படை அரசியல் சாசன உரிமை மீறலாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.