சுவிஸ் நாட்டிலிருந்து உண்டியல் என்னும் போர்வையில் மக்களின் பணத்தை கொள்ளையடிக்கும் சகோதரர்கள்.

#swissnews #Robbery
Kanimoli
1 year ago
சுவிஸ் நாட்டிலிருந்து உண்டியல் என்னும் போர்வையில் மக்களின் பணத்தை கொள்ளையடிக்கும் சகோதரர்கள்.

சுவிஸ் நாட்டிலிருந்து உண்டியல் என்னும் போர்வையில் மக்களின் பணத்தை கொள்ளையடிக்கும் சகோதரர்கள். சுவிசில் சட்டபூர்வமாகவும். சட்டத்துக்கு புறம்பாகவும் பணப்பரிமாற்று சேவையை குடிசைக் கைதொழில் போல செய்கின்றனர். 

அதன் அடிப்படையில் சுவிஸ் டெலெமோண்ட் யூரா என்னும் இடத்தில் வசிக்கும் இரு சகோதரர்கள் நல்ல பெறுமதிக்கு உண்டியல் அனுப்புகிறோம் என கூறி பலரை ஏமாத்தியுள்ள தகவல் சுவிசில் மக்களிடையே ஒரு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 இவர்களால் சென்காலன், பேர்ன், சூரிச், ஆர்காவு, சுக் போன்ற இடங்களில் வாழும் பலரிடம் இவர்கள் லட்சக் கணக்கான பிரங்குகளை ஏமாத்தியுள்ளார்கள். இவர்களின் பல ஆதாரங்கள், புகைப்படங்கள் LANKA4 இடம் உள்ளது இவர்கள் தாம் திருந்தாமல்போனால் நாம் அவர்களை சட்டத்தின் முன்னே நிறுத்துவோம் என பேர்னில் பாதிக்கப்பட்டு அடி போட்டு பணத்தை வாங்கிய ஒரு பிரபல்யம் கூறியுள்ளார். 

 இப்படி இவர்கள் பணத்தை வாங்கியதும் தொலைபேசியை புளோக் செய்துவிட்டு மறைகிறனர். இவர்களால் சிலர் இலங்கை இந்தியாவிலும் பாதிக்கப்பட்டுனர். இவர்களது உரையாடல். போட்டோ வதிவிட முகவரி. வேலை செய்யும் இட முகவரி என்பனவற்றை பாதிக்கப்பட்டவர்களில் சிலர் வைத்துள்ளனர்.

என்பதும் அறியகூடியவாறு உள்ளது. விரைவில் இவைகள் LANKA4 ஊடகத்தில் பகிரங்கப்படும். மக்களே உங்களுக்கு தெரியாத புதிய முகவர்களை நம்பவேண்டாம்.