மாரடைப்பால் மரணமடைந்த நடிகர் ஜே.கே.ரிதீஷ் மனைவிக்கு 6 மாத சிறைத் தண்டனை என்ற அதிர்ச்சித் தீர்ப்பு கிடைத்துள்ளது.

#India #Cinema #Court Order #TamilCinema
Mani
3 years ago
மாரடைப்பால் மரணமடைந்த நடிகர் ஜே.கே.ரிதீஷ் மனைவிக்கு 6 மாத சிறைத் தண்டனை என்ற அதிர்ச்சித் தீர்ப்பு கிடைத்துள்ளது.

நடிகர் ஜே.கே.ரித்தீஷ் அரசியலுக்கு வருவதற்கு முன்பு தமிழ் படங்களில் நடித்துள்ளார். திமுக சார்பில் போட்டியிட்டு எம்பியானார். பின்னர் அதிமுகவுக்கு மாறினார்.

2019 ஆம் ஆண்டில், அவர் தனது 46 வயதில் திடீர் மாரடைப்பால் காலமானார், இது திரைப்பட மற்றும் அரசியல் துறைகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஜே.கே.ரித்தீஷின் மனைவி ஜோதீஸ்வரி தற்போது நகைக்கடை நடத்தி வருகிறார், நகை பட்டறை உரிமையாளர் திருச்செல்வத்திடம், நகை வாங்கியதற்காக, 60 லட்சம் ரூபாய் பாக்கி, பணம் செலுத்துவதற்காக அவர் எழுதிய காசோலை பவுன்ஸ் ஆகியுள்ளது.

அவர் தொடர்ந்த வழக்கில் காரைக்குடி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஜே.கே.ரிதிஷின் மனைவிக்கு ஆறுமாத சிறைத்தண்டனையும் அறுபது இலட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4