கடவுச்சீட்டு தொடர்பில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிமுகப்படுத்தும் புதிய நடைமுறை

#SriLanka #Passport #Official
Prasu
3 years ago
கடவுச்சீட்டு தொடர்பில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிமுகப்படுத்தும் புதிய நடைமுறை

இலங்கையில் கடவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்வதற்கு இரண்டு வாரங்களுக்குள் புதிய திறமையான பொறிமுறையொன்று அறிமுகப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் இதனை அறிவித்துள்ளது. இதற்கிடையில், முன்கூட்டியே நியமனம் செய்தவர்கள் மாத்திரமே கடவுச்சீட்டைப் பெறுவதற்கு அலுவலகங்களுக்குச் செல்ல வேண்டும் என திணைக்களம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

வார நாட்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை 0707101060 அல்லது 0707101070 என்ற எண்ணிற்கு அழைப்பதன் மூலம் சந்திப்புகளை மேற்கொள்ளலாம்.

இதேவேளை, நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், விரைவில் வெளிநாடு செல்ல விரும்புபவர்கள் மற்றும் குறுகிய விடுமுறையில் நாட்டிற்கு வந்து புதிய கடவுச்சீட்டு தேவைப்படுபவர்கள் தமது ஆவணங்களை சமர்ப்பித்து சேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

 ஒரு நாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டு விண்ணப்பங்கள் காலை 8 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையும், சாதாரண சேவையின் கீழ் கடவுச்சீட்டு விண்ணப்பங்கள் காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையும் ஏற்றுக்கொள்ளப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4