கொழும்பு நகரில் பலத்த பாதுகாப்பு ஏன்?

#Colombo #Police #Lanka4 #Sri Lankan Army #sri lanka tamil news
Prathees
3 years ago
கொழும்பு நகரில் பலத்த பாதுகாப்பு ஏன்?

அரச புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று முன்தினம்  (13ம் திகதி) முதல் கொழும்பு நகரில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

 இந்த பாதுகாப்பு வேலைத்திட்டத்தில் பொலிஸாரும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் இராணுவத்தினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

 கொழும்பு 07 துன்முல்லை, கொழும்பு பல்கலைக்கழகப் பகுதி, சுதந்திர சதுக்கம்,காலி முகத்திடல் , கொழும்பு கோட்டை மற்றும் நகர மண்டபம் ஆகிய பகுதிகளில் இந்த பாதுகாப்பு வேலைத்திட்டம் மிகவும் பயனுள்ளதாக உள்ளதாக நிஹால் தல்துவ தெரிவித்தார்.

 இதேவேளை, கொழும்பு நகரில் வீதி கண்காணிப்பு நடவடிக்கைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4