கர்நாடகா ஆளுநரை சந்தித்தார் சித்தராமையா! ஆட்சியமைக்க உரிமைகோரினார்

#Tamilnews
Mani
1 year ago
கர்நாடகா ஆளுநரை சந்தித்தார் சித்தராமையா! ஆட்சியமைக்க உரிமைகோரினார்

 கர்நாடக சட்டமன்றத் தேர்தல் முடிவு பெற்று அதிக பெரும்பான்மை 135 இடங்களை பெற்று ஆட்சி அமைக்க உள்ளது காங்கிரஸ்,   இந்த நிலையில் முன்னாள் முதல்வர் சித்தராமயருக்கும் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் டி கே சிவகுமாருக்கும் இடையில் முதலமைச்சருக்கான போட்டி ஏற்பட்டு கடந்த ஐந்து நாட்களாக பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.

 இந்தப் பேச்சுவார்த்தையில் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல் காந்தி இவர்களை சமாதானப்படுத்தி சித்த ராமையா முதலமைச்சராகவும் டி கே சிவக்குமார் துணை முதல்வர் ஆகும் பதவியேற்க உள்ளனர் என காங்கிரஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளிப்படுத்தியது. இந்நிலையில் கர்நாடக மாநில கவர்னர் தாவர்சந்த் கெலாட்டை அவர்களை சந்தித்து சித்தராமையா ஆட்சியமைக்க உரிமைகோரினார்.