சீன பிரஜைகளை நாடுகடத்த முயன்ற அதிகாரிகளுக்கு எதிராக விசாரணை: விடுவித்த அமைச்சருக்கு விசாரணை இல்லை

#SriLanka #China #Airport
Mayoorikka
3 years ago
சீன பிரஜைகளை நாடுகடத்த முயன்ற  அதிகாரிகளுக்கு எதிராக விசாரணை: விடுவித்த அமைச்சருக்கு விசாரணை இல்லை

சீன பிரஜையொருவர் போலிகடவுச்சீட்டை பயன்படுத்தி நாட்டிற்குள் நுழைய முயற்சித்த சம்பவம் தொடர்பில் குடிவரவுகுடியகல்வு துறை அதிகாரிகளிற்கு எதிராக விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு விவகாரங்களிற்கான அமைச்சர் டிரான் அலெஸ் தெரிவித்துள்ளார்.

 குறிப்பிட்ட சீன பிரஜையை இன்று அமைச்சிற்கு அழைத்து விசாரணை செய்யவுள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர் சீன தூதரகத்தின் ஆலோசனையின் பின்னர் ஏனைய நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

 போலி கடவுச்சீட்டுடன் பயணித்தவர் கைதுசெய்யப்பட்டவேளை தலையிட்டு விடுதலை செய்த அமைச்சர் அருந்திக பெர்ணாண்டோவிற்கு எதிராக நடவடிக்கை எதனையும் எடுக்கப்போவதில்லை என தெரிவித்துள்ள அமைச்சர் தவறான உத்தரவுகளை குடிவரகுடிகயல்வு துறை அதிகாரிகள் பின்பற்றக்கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.

 போலி கடவுச்சீட்டுடன் கைது செய்யப்பட்ட சீன பயணியை இராஜாங்க அருந்திக பெர்ணாண்டோ தலையிட்டு விடுதலை செய்தார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

 போலிகடவுச்சீட்டுடன் சீன பயணியொருவரும் அவரது இரு நண்பர்களும் கொழும்பு விமானநிலையத்திற்குள் நுழைய முயற்சி செய்ததாகவும் குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் அவர்களை கண்டுபிடித்த வேளை அவர்கள் அடாவடியான விதத்தில் நடந்துகொண்டனர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 குடிவரவுகுடியகல்வு துறை அதிகாரிகள் அவர்களை நாடு கடத்துவதற்காக தடுத்துவைத்திருந்தவேளை இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்ணான்டோ தலையிட்டு விடுவித்துள்ளார்.

 18ம் திகதி கொழும்பு விமானநிலையத்திற்கு வந்து சேர்ந்த சீன பயணிகள் வேறு நாட்டொன்றின் கடவுச்சீட்டை கையளித்துள்ளனர் அவை போலியான கடவுச்சீட்டுகள் என அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

 இவர்கள் விடயத்தில் தலையிட்ட இராஜாங்க அமைச்சர் போலி கடவுச்சீட்டுடன் கைதுசெய்யப்பட்டவர் ஒரு முதலீட்டாளர் என தெரிவித்து அவரை விடுதலை செய்யுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 இதனை தொடர்ந்து இரண்டு சீன பிரஜைகளும் ஒரு எகிப்திய பிரஜையும் சனிக்கிழமை விடுதலை செய்யப்பட்டுள்ளனர். முதலீட்டாளர்கள் போலிகடவுச்சீட்டுகளை பயன்படுத்தி நாட்டிற்குள் நுழைவதற்கு அனுமதிக்கப்பட்டமை குறித்து அதிகாரிகள் ஆச்சரியம் வெளியிட்டனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4