தமிழ்நாட்டு முதல்வர் மு.க.ஸ்டாலி்ன் சிங்கப்பூர் மற்றும் ஜப்பானுக்கு பொருளாதார சுற்றுப்பயணம்

#India #Prime Minister #M. K. Stalin #Lanka4 #லங்கா4
Mugunthan Mugunthan
11 months ago
தமிழ்நாட்டு முதல்வர் மு.க.ஸ்டாலி்ன் சிங்கப்பூர் மற்றும் ஜப்பானுக்கு பொருளாதார சுற்றுப்பயணம்

முதலீடுகளை ஈர்க்க தமிழ்நாட்டு முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளிநாட்டுச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இன்று மாலை சிங்கப்பூர் சென்றடைந்தார்.

 தமிழ்நாட்டுக்கு முதலீடுகள் மற்றும் புதிய தொழில்நுட்பங்களைக் கொண்டு வரவும், வரும் ஜனவரியில் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளா்கள் மாநாட்டுக்கு அழைப்பு விடுக்கவும் அரசு முறைப் பயணமாக சிங்கப்பூா் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு முதல்வா் ஸ்டாலின் பயணம் மேற்கொண்டுள்ளார். 

சிங்கப்பூரில் முதல்வர் ஸ்டாலினை, தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வரவேற்றார். முதல்வர் ஸ்டாலினுடன் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு மற்றும் அரசு அதிகாரிகள் சென்றுள்ளனர் சிங்கப்பூர் நாட்டின் அமைச்சர்கள், முன்னணி தொழில் நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளை சந்தித்து முதல்வர் ஸ்டாலின் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். 

இதனைத் தொடா்ந்து, ஜப்பான் நாட்டிற்கு முதல்வா் ஸ்டாலின் பயணம் மேற்கொள்கிறாா். ஜப்பானில் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மாநாடு நடைபெறவுள்ளது.

 இதில் நிறுவனங்களுடன் புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் கையொப்பமாகவுள்ளன.  ஜப்பான் ஒசாகாவில் இந்திய வம்சாவளியினா் அதிக அளவில் வசித்து வருகிறாா்கள். அங்குள்ள தமிழா்களின் அழைப்பை ஏற்று, முதல்வா் ஸ்டாலின் தலைமையிலான குழு முதல்முறையாக ஒசாகா நகருக்குச் செல்லவுள்ளது. 

ஜப்பானின் டோக்கியோ நகரில் அந்த நாட்டின் பொருளாதாரம் வா்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சா் நிஷூமுரா யசுதோஷி மற்றும் ஜப்பானின் தொழில் நிறுவனமான ஜெட்ரா தலைவா் இஷிகுரோ நொரிஹிகோ ஆகியோரை முதல்வா் ஸ்டாலின் சந்தித்துப் பேசவுள்ளாா்.

 இந்த  சிங்கப்பூா் மற்றும் ஜப்பான் நாடுகளில் பயணத்தை முடித்துக் கொண்டு மே 31-ஆம் தேதி நள்ளிரவில் முதல்வா் ஸ்டாலின் சென்னை திரும்பவுள்ளாா்.