பேஸ்புக் மூலம் ஒரு நபருடன் பழகியதால் சிறுமிக்கு ஏற்பட்ட விபரீதம்

#India #Facebook
Mani
1 year ago
பேஸ்புக் மூலம் ஒரு நபருடன் பழகியதால் சிறுமிக்கு ஏற்பட்ட விபரீதம்

திரிபுரா மாநிலம் உதய்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கு 21 வயது வாலிபரை ஃபேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக, சிறுமியும், இளைஞனும் பேஸ்புக் மூலம் தொடர்பு கொண்டு ஒருவருக்கொருவர் காதல் உணர்வுகளை வளர்த்துக் கொண்டனர்.

அந்த இளைஞன் கடந்த புதன்கிழமை சிறுமியிடம் தன்னை சந்திக்கும்படி கூறியுள்ளான். அதன் பிறகு, சிறுமி திபென்யா பூங்காவிற்கு வந்தார்.

சிறுமியை சந்தித்த பிறகு அந்த இளைஞர் வலுக்கட்டாயமாக செல்போனில் புகைப்படம் எடுத்துள்ளார். பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவள் அங்கிருந்து தப்பி ஓட முயன்றாள். இருப்பினும், அந்த இளைஞன் அவளை பூங்காவில் உள்ள வனப்பகுதிக்கு அழைத்து வந்து பாலியல் வன்கொடுமை செய்தான். அந்த இளைஞனுடன் வந்த மேலும் 2 பேரும் சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

பின்னர், சிறுமியை காரில் ஏற்றிச் சென்ற 3 பேர், ராஜர்பக் பகுதியில் வந்தபோது ஓடும் காரில் இருந்து சிறுமியை வீசிவிட்டு தப்பிச்சென்றனர்.

கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பின்னர், சிறுமி வீடு திரும்பிய நிலையில் தனக்கு நேர்ந்த கொடூரம் குறித்து குடும்பத்தினரிடம் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

 புகார் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பேஸ்புக் இளைஞரை கைது செய்தனர். சம்பவத்தில் தொடர்புடைய மேலும் 2 பேரை தேடும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.