சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு! டிரோன், ஆளில்லா விமானங்கள் பறக்க தடை

#Police #Lockdown #Drone #Tamilnews #Breakingnews #TamilNadu Police #Chennai #Security
Mani
1 year ago
சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு! டிரோன், ஆளில்லா விமானங்கள் பறக்க தடை

ஜி-20 மாநாட்டை தொடர்ந்து சென்னையில் 5 நாட்களுக்கு டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை மாமல்லபுரத்தில் வரும் 19ம் தேதி முதல் 21ம் தேதி வரை ஜி-20 மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் வெளிநாட்டு பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.

இதனால், ஜி-20 மாநாட்டை முன்னிட்டு வரும் 18ம் தேதி முதல் 22ம் தேதி வரை 5 நாட்கள் சென்னையில் டிரோன்கள் பறக்க காவல்துறை தடை விதித்துள்ளது.

மேலும், பிரதிநிதிகள் வருகை, தங்கும் இடங்கள் மற்றும் மேற்படி பிரமுகர்கள் பயணம் செய்யும் வழிதடங்கள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.