கோழி இறைச்சிக்கு பதிலாக கழுகு இறைச்சி! பிரியாணி கடைகளுக்கு விற்பனை

#Recipe #Cooking #Food #Tamilnews #Breakingnews
Mani
1 year ago
கோழி இறைச்சிக்கு பதிலாக கழுகு இறைச்சி! பிரியாணி கடைகளுக்கு விற்பனை

திருநெல்வேலி மாநகரின் பேட்டை மற்றும் டவுன் , பாறையடி பகுதிகளில் தொடர்ந்து கழுகுகள் வேட்டையாடப்படுவதாக புகார் எழுந்தது.

இறைச்சிக்காக கழுகுகள் வேட்டையாடப்படுவதாகவும், அவை உணவு விடுதிகளுக்கும் கோழி இறைச்சிக்கு மாற்றாக விற்பனை செய்யப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இதுகுறித்து வனத்துறையினர் இன்று காலை முதல் தொடர் விசாரணை செய்து வந்தனர். இந்த நிலையில், பேட்டை பகுதியில் வனத்துறையினர் ரோந்து சென்றனர்.

அப்போது அங்கு பொறிவைத்து கழுகுகளை வேட்டையாடிக் கொண்டிருந்த மூன்று பேரை வனத்துறையினர் பிடித்து கைது செய்தனர். அவர்களிடத்தில் இருந்து நான்கு கழுகுகளையும் பறிமுதல் செய்தனர். கைதானவர்கள் மணிகண்டன் ,பாலமுருகன் , வேலாயுதம் என்பது தெரிய வந்தது.