ஏர்பஸ் நிறுவனத்திடம் இருந்து புதிதாக 500 விமானங்களை வாங்க இண்டிகோ நிறுவனம் ஒப்பந்தம்

#India #Flight #Airport #Tamilnews #ImportantNews
Mani
1 year ago
ஏர்பஸ் நிறுவனத்திடம் இருந்து புதிதாக 500 விமானங்களை வாங்க இண்டிகோ நிறுவனம் ஒப்பந்தம்

நேற்று, இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனங்களில் ஒன்றான இண்டிகோ, 500 ஏர்பஸ் (A320) விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

வணிக விமானப் போக்குவரத்து வரலாற்றில், 500 ஏர்பஸ் விமானங்களை ஒரே நேரத்தில் வாங்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது இதுவே முதல் நிகழ்வாகும்.

சில வாரங்களுக்கு முன்பு ஏர் இந்தியா 470 ஏர்பஸ் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தை இறுதி செய்தது. இண்டிகோ நிறுவனமும் 500 விமானங்களை வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்திய விமானப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதும், உலக மக்கள்தொகை வளர்ச்சியைப் பயன்படுத்திக் கொள்ள விரும்பும் விமான நிறுவனங்களுக்கிடையேயான போட்டியும் இதற்குக் காரணமாக இருக்கலாம். 2030-2035-க்குள் இந்த விமானங்களை ஏர்பஸ் நிறுவனம் வினியோகம் செய்ய இருக்கிறது.