முன்னாள் தலைமைச் செயலாளர் சபாநாயகம் மறைவிற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்று ஆறுதல் கூறினார்!

#India #Prime Minister #Death #Minister #Tamilnews #family
Mani
1 year ago
முன்னாள் தலைமைச் செயலாளர் சபாநாயகம் மறைவிற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்று ஆறுதல் கூறினார்!

மறைந்த முன்னாள் தலைமை செயலாளர் சபாநாயகத்தின் குடும்ப உறுப்பினர் களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல் கூறினார்.

தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளராக இருந்த சபாநாயகம் நேற்று முன்தினம் வயது மூப்பின் காரணமாக காலமானார்

அரசு மரியாதை உடன் காவல்துறையின் 30 குண்டுகள் முழங்க அவருக்கு இறுதி சடங்கு நடைபெற்றது இந்நிலையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சென்னை ஆர்.ஏ புரத்தில் உள்ள அவரது இல்லத்தில் சபாநாயகத்தின் குடும்ப உறுப்பினர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார் அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகத்தின் மூத்த மகன் பேசியது கருணாநிதி ஆட்சியின் போது ஐந்து ஆண்டுகள் அப்பா தலைமை செயலாளராக இருந்ததாகவும் ஆட்சியின் துவக்கத்தில் தலைமை செயலாளராக இருந்த அவர் இறுதியில் நண்பராக இருந்தார் என்று முதல்வர் தெரிவித்ததாக கூறினார் அப்பாவை பற்றி அவர் பகிர்ந்து கொண்டவை எங்களுக்கு மன நிம்மதியாக இருந்தது என கூறினார்.