அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் 23 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்

#India #Tamil Nadu #Tamil People #Rain #District #HeavyRain #Tamilnews
Mani
1 year ago
அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் 23 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்

தென்மேற்கு வங்கக்கடலில் தற்போது மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு ஏற்பட்டுள்ளதால், தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல்வேறு மாவட்டங்களில் இன்று முதல் வரும் 6ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தென்மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, நாகை உள்ளிட்ட 23 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.