கேரளாவில் உள்ள இடுக்கி மற்றும் கண்ணூர் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது

#India #Tamil People #Rain #HeavyRain #Breakingnews #Kerala #Cyclone
Mani
1 year ago
கேரளாவில் உள்ள இடுக்கி மற்றும் கண்ணூர் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது

தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதால் கேரளாவில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், இடுக்கி மாவட்டம் மூணாறில் நேற்று இரவு இடி மின்னலுடன் கனமழை பெய்ததால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

கனமழை காரணமாக கேரளாவில் உள்ள இடுக்கி மற்றும் கண்ணூர் மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, காசர்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் அலார்ட் விடுக்கப்பட்டுள்ளது.