ராமேசுவரத்தில் திடீரென 200 மீட்டர் உள்வாங்கிய கடல்!

#Fisherman #Tamilnews #Boat #Ocean
Mani
1 year ago
ராமேசுவரத்தில் திடீரென 200 மீட்டர் உள்வாங்கிய கடல்!

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால், கடலோரப் பகுதிகளில் சூறைக்காற்றும், பலத்த காற்றும் வீசி வருகிறது. இதனால் மீனவர்கள் கடலுக்குச் செல்வதை தவிர்க்குமாறு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் நேற்று முதல் ராமேஸ்வரம், மண்டபம், பாம்பன், தனுஷ்கோடி போன்ற பகுதிகளில் கடல் வழக்கத்திற்கு மாறாக சீற்றமாக காணப்பட்டது. மணிக்கு 55 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசுகிறது, முதல் 65 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசுகிறது.

இந்த நிலையில், ராமேஸ்வரத்தில் கடல் வழக்கத்துக்கு மாறாக திடீரென 200 மீட்டர் உள்வாங்கியுள்ளது. இதனால் கடலில் நிறுத்தப்பட்டிருந்த நாட்டு படகுகள் தரை தட்டி நின்றன. மேலும் பாறை மற்றும் பவளப்பாறைகள், பாசிகள், சிப்பிகள் உள்ளிட்டவைகள் தெளிவாக வெளியே தெரிந்தன. கடல் உள்வாங்கியதால் மீனவர்கள் அச்சத்தில் உள்ளனர். மேலும் பாம்பன் வடக்கு மீன்பிடித் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த நாட்டு படகுகள் மற்றும் பைபர் படகுகள் தரை தட்டின.

மீனவர்களின் கூற்றுப்படி, பொதுவாக துறைமுக கடற்கரை, அக்னி தீர்த்த கடற்கரை, சங்குமால் போன்ற பகுதிகளில் கடல் நீர் உறிஞ்சப்பட்டு, காற்று வீசும் காலங்களில் இயல்பு நிலைக்குத் திரும்பும்.