உச்சத்தை தொட்ட தக்காளி விலை! உத்தரகாண்டில் 1 கிலோ ரூ.250-க்கு விற்பனை

#India #Tamil Nadu #Tamil People #people #Vegetable #Tamilnews
Mani
1 year ago
உச்சத்தை தொட்ட தக்காளி விலை! உத்தரகாண்டில் 1 கிலோ ரூ.250-க்கு விற்பனை

சமீப நாட்களாக தமிழகம் உட்பட நாடு முழுவதும் தக்காளியின் விலை கடுமையாக உயர்ந்து வருவது பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. போதிய வரத்து இல்லாததாலும், கனமழை காரணமாகவும் விலை மேலும் அதிகரித்துள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை தக்காளியின் விலையை கட்டுப்படுத்த தமிழக அரசு மலிவு விலையில் சென்னை சுற்றுவட்டார பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் தக்காளியை விற்பனைக்கு கொண்டு வந்தது. இதனிடையே தக்காளி விலை சற்று குறைந்து 90 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்த எதிர்பாராத சூழ்நிலையில் உத்தரகாண்ட் மாநிலம் வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது. உத்தரகாண்ட் மாவட்டத்தில், தக்காளி கிலோ ஒன்றுக்கு ரூ.200 முதல் 250 வரை விற்கப்படுகிறது, இது உள்ளூர் மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.