ஒடிசா ரயில் விபத்து தொடர்பில் 3 ரயில் ஊழியர்கள் கைது

#India #Death #Arrest #Accident #Train
Prasu
1 year ago
ஒடிசா ரயில் விபத்து தொடர்பில் 3 ரயில் ஊழியர்கள் கைது

கடந்த மாதம் 292 பேரைக் கொன்ற ரயில் பேரழிவு தொடர்பாக இந்தியாவின் ஃபெடரல் போலீசார் மூன்று ரயில்வே ஊழியர்களை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் இருவர் பொறியாளர்கள் என்றும், மூன்றாமவர் ரயில்வேயில் தொழில்நுட்ப வல்லுநராக பணிபுரிந்தவர்கள் என்றும் மத்திய புலனாய்வுப் பிரிவின் (சிபிஐ) அறிக்கை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் ரயில் பாதுகாப்பு குறித்த கேள்விகளை புதுப்பித்த ஜூன் 2 விபத்தைத் தொடர்ந்து குற்றவியல் அலட்சிய வழக்கைப் பதிவு செய்த பின்னர் சிபிஐ விசாரணையைத் தொடங்கியது.

 கிழக்கு ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் இரும்பு தாது ஏற்றப்பட்ட சரக்கு ரயிலில் பயணிகள் ரயில் மோதியதில் விபத்து ஏற்பட்டது. பயணிகள் ரயில் தடம் புரண்டு, எதிர்திசையில் சென்ற மற்றொரு பயணிகள் ரயில் மீது மோதியது குறிப்பிடத்தக்கது