'சந்திரயான் 3' ஏவுகணை சோதனை நிறைவடைந்துள்ளதாக இஸ்ரோ தகவல்

#India #world_news #Tamilnews #Rocket #Space
Mani
1 year ago
'சந்திரயான் 3' ஏவுகணை சோதனை நிறைவடைந்துள்ளதாக இஸ்ரோ தகவல்

பூமியில் இருந்து 384 ஆயிரம் கிலோமீட்டர் தொலைவில் உள்ள நிலவை ஆய்வு செய்யும் நோக்கில் சந்திரயான்-3 திட்டம் ரூ.615 கோடி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. தற்போது இந்த பணியை இஸ்ரோ விஞ்ஞானிகள் நிறைவு செய்துள்ளனர். ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் தற்போது எல்.வி.எம். 3 ராக்கெட் என்று அழைக்கப்படுகிறது. இந்த ராக்கெட்டில் சந்திரயான்-3 விண்கலம் வைக்கப்பட்டு விண்ணில் ஏவப்பட உள்ளது.

சந்திரயான்-3 விண்கலம் வரும் 14ம் தேதி விண்ணில் ஏவப்பட உள்ளது. ஆந்திர பிரதேச மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து அதிக எடையை தாங்கி செல்லும் மார்க்-3 ராக்கெட் மூலம் சந்திரயான்-3 விண்கலம் விண்ணில் பாய்கிறது.

இந்த நிலையில் ‘சந்திராயன் 3’ விண்கலத்தை விண்ணில் செலுத்துவதற்கான ஒத்திகை நிறைவடைந்துள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. மேலும், ராக்கெட் விண்ணில் ஏவுவதற்கான கவுண்டவுன் விரைவில் தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.