தூத்துக்குடி அருகே 40 மூட்டை பீடி இலைகளை இலங்கைக்கு கடத்த முயற்சி!

#India #Terrorist #2023 #Tamilnews
Mani
1 year ago
தூத்துக்குடி அருகே 40 மூட்டை பீடி இலைகளை இலங்கைக்கு கடத்த முயற்சி!

தூத்துக்குடி கடற்பகுதியில் இருந்து இலங்கைக்கு வெற்றிலை, மஞ்சள், கஞ்சா போன்ற சட்டவிரோத பொருட்கள் கொண்டு செல்லப்படுவதை தடுக்கும் நோக்கில் கடலோர காவல்படை போலீசார் மற்றும் கியூ பிரிவு போலீசார் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.

அதன்படி, தூத்துக்குடி தருவைகுளம் கடற்கரையிலிருந்து இலங்கைக்கு பீடிஇலை கடத்தப்படுவதாக தூத்துக்குடி மாவட்ட கியூ பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்ததாம். அதன்பேரில், கியூ பிரிவு ஆய்வாளர் விஜய அனிதா தலைமையிலான போலீஸார் தருவைகுளம் கடற்கரை பகுதியில் புதன்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.


அந்த நேரத்தில், ஒரு சிறிய சரக்கு வாகனத்தில் இருந்து பீடி இலைகள் படகில் இறக்கப்பட்டன. போலீசாரை கண்டதும், அந்த நபர்கள் தப்பியோடியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, சுமார் 1.25 டன் பீடி இலை மூட்டைகளையும், சிறிய சரக்கு வாகனத்தையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். மேலும், தப்பியோடிய நபர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.