பேருந்து எதிர்பாராதவிதமாக தீப்பிடித்து எரிந்தது, ஆனால் அதிர்ஷ்டவசமாக 50 பயணிகள் உயிர் தப்பினர்

#India #Accident #fire #Tamilnews
Mani
2 years ago
பேருந்து எதிர்பாராதவிதமாக தீப்பிடித்து எரிந்தது, ஆனால் அதிர்ஷ்டவசமாக 50 பயணிகள் உயிர் தப்பினர்

மகாராஷ்டிர மாநிலம் தானே நகரில் இன்று காலையில் சுமார் 50 பயணிகளுடன் அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. நர்போலியில் இருந்து சேந்தனி கோலிவாடா பகுதிக்கு சென்று கொண்டிருந்த பேருந்து, மத்திய மைதானம் அருகே வந்தபோது, ​​காலை 8.30 மணியளவில் எதிர்பாராதவிதமாக தீப்பிடித்தது.

என்ஜின் பகுதியில் இருந்து புகை வெளியேறியதைக் கண்ட டிரைவர் உடனடியாக பேருந்தை நிறுத்தினார். இதையடுத்து, பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் பேருந்தின் ஒரு பகுதி சேதமடைந்துள்ளதுடன், மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. அதிர்ஷ்டவசமாக, பஸ் உடனடியாக நிறுத்தப்பட்டதால், பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதால், எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4