கோவா விமான நிலையத்திற்கு குடிபோதையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது

#India #Arrest #Airport #Tamilnews #Breakingnews #ImportantNews #Coimbatore
Mani
1 year ago
கோவா விமான நிலையத்திற்கு குடிபோதையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது

கோவாவில் உள்ள மனோகர் சர்வதேச விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, விமான நிலைய அதிகாரிகளும், வெடிகுண்டு செயலிழப்புப் படையினரும் விமான நிலையத்தில் தீவிர சோதனை நடத்தினர்.

அவர்கள் வாஸ்கோவில் உள்ள டபோலிம் சர்வதேச விமான நிலையத்தையும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வந்தனர். பின்னர் அது புரளி என தெரியவந்தது. விமான நிலையத்தில் பணிபுரியும் குந்தன் (வயது 22) என்பவர் குடிபோதையில் இவ்வாறு மிரட்டல் விடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதையடுத்து அதிகாரிகள் அவரை பிடித்து விசாரணை நடத்தினர்.