மத்திய பிரதேசத்தில் கனமழை காரணமாக ரெட் அலர்ட் இந்திய வானிலை மையம் எச்சரிக்கை

#India #HeavyRain #Tamilnews #Breakingnews #ImportantNews #Cyclone
Mani
1 year ago
மத்திய பிரதேசத்தில் கனமழை காரணமாக ரெட் அலர்ட் இந்திய வானிலை மையம் எச்சரிக்கை

மத்திய பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் வரும் 3ம் தேதி (நாளை) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், இன்று கிழக்கு மத்திய பிரதேசத்தில் குறிப்பாக கனமழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், மத்தியப் பிரதேசத்துக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. மழையினால் சில பகுதிகளில் வெள்ளம் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது, தாழ்வான பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேறுமாறும், பலவீனமான நிலையில் இருக்கும் கட்டிடங்கள் அருகே செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.