மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.71¾ மதிப்புள்ள தங்கம் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல்

#India #Flight #Arrest #Police #Tamilnews #Gold #Breakingnews #TamilNadu Police #ImportantNews
Mani
1 year ago
மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.71¾ மதிப்புள்ள தங்கம் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல்

மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 71¾ லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கம் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. திருச்சி விமான நிலையத்தில் இருந்து மலேசியா, சிங்கப்பூர், மஸ்கட், ஓமன், துபாய், சார்ஜா, இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. சமீப காலமாக இந்த நாடுகளில் இருந்து தங்கம் கடத்தல் சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

இதைத்தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தும் தங்கம் கடத்தல் சம்பவம் தொடர் கதையாக உள்ளது. குறிப்பாக துபாய் மற்றும் சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் விமானங்களில் அதிக அளவில் பயணிகள் தங்கத்தை கடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து புறப்பட்ட ஏர் ஏசியா விமானம் நேற்று திருச்சி விமான நிலையம் வந்தது. இதையடுத்து, விமானப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த சுங்கத்துறை அதிகாரிகள் பயணிகளிடம் தீவிர சோதனை நடத்தினர். இரண்டு பயணிகளின் நடவடிக்கைகள் குறித்து சந்தேகம் எழுந்ததால், அவர்களை பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர்களின் ஆசனவாயில் தங்கம் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

பின்னர், அவர்களிடம் இருந்து ரூ.71 லட்சத்து 72 ஆயிரம் மதிப்புள்ள மொத்தம் 1 கிலோ 188 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. தங்கத்தை கடத்திய இரண்டு பயணிகளிடம் அதிகாரிகள் தற்போது தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.