அதிவேகத்தில் சீறிப்பாய்ந்த கார் அடுத்தடுத்து 5 வாகனங்கள் மீது மோதியதில் 3 பேர் பலி

#India #Accident #Tamilnews #ImportantNews
Mani
1 year ago
அதிவேகத்தில் சீறிப்பாய்ந்த கார் அடுத்தடுத்து 5 வாகனங்கள் மீது மோதியதில் 3 பேர் பலி

இன்று, கோவாவின் பனாஜி அருகே, வேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து மூன்று கார்கள், ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் ஒரு ஸ்கூட்டர் மீது மோதியது. இந்த சம்பவம் பாண்டா-பனாஜி தேசிய நெடுஞ்சாலையில் நடந்துள்ளது.

விபத்தை ஏற்படுத்திய கார் உட்பட 6 வாகனங்கள் பலத்த சேதமடைந்தன. சம்பவ இடத்திலேயே ஸ்கூட்டரில் சென்ற கணவன்-மனைவியும், மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கு காரணமான கார் டிரைவரை கைது செய்தனர். விசாரணையில் அவர் குடிபோதையில் வாகனத்தை இயக்கியது தெரியவந்துள்ளது.