சுவிஸில் திரையிடப்பட்ட பத்தே டீட்லிகோனில் என்ற திரைப்பட திரையரங்கில் கலகம்

#Switzerland #Lanka4 #சுவிட்சர்லாந்து #திரைப்படம் #லங்கா4 #Security #Movie
சுவிஸில் திரையிடப்பட்ட பத்தே டீட்லிகோனில் என்ற திரைப்பட திரையரங்கில் கலகம்

சனிக்கிழமையன்று பத்தே டீட்லிகோனில் என்ற ஒரு திரைப்படத் திரையிடலின் போது அமைதியின்மை மற்றும் கைகலப்பு ஏற்பட்டது. தேவை ஏற்பட்டால் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த காவலர்கள் ஒழுங்கு செய்யப்படும் என சினிமா செய்திகள் தெரிவிக்கின்றன.

மேற்கூறிய இந்த திரைப்படத்தினை திரையில் பார்க்க திரையரங்கில் சனிக்கிழமை பலர் வந்திருந்த வேளை அங்கு ஒரு கும்பல் சப்தமிட்டும் கூச்சலிட்டுக்கொண்டும் இருந்தது.

விறுவிறுப்பாக சென்ற இத் திரைப்படத்தினை பார்க்கச்சென்ற ஒரு பெண் இந்த கும்பலின் அட்டகாசம் பொறுக்காது அவர்களை எச்சரித்தார். இருப்பினும் இவர்கள் அதனைப்பொருட்படுத்தாது மேலும் சப்தமிட்டு அப்பெண்ணையும் அவதுாறு செய்துள்ளனர்.

அவ்வேளை அந்தப் பெண்ணுடன் வந்த ஆண் நண்பர் அந்த கும்பலுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனை ஏனை பார்வையாளர்களும் தடுத்துள்ளனர். ஈற்றில் அந்தக் கும்பல் தொடர்ந்து தமது அட்டகாசத்தினை செய்து பின்னர் குறிப்பிட்ட ஒரு நேரத்தில் திரையரங்கை விட்டு வெளியேறினர்.

இந்தத் திரைப்படத்தினை திரையிட்ட பொழுதிலிருந்து இங்கு கலகங்கள் நிகழ்வதால் திரையரங்கிற்கு பாதுகாப்பு வழங்க பாதுகாப்பு உத்தியோகத்தர்களை நியமிக்க எண்ணியுள்ளனர்.