நெல்லை-திருச்செந்தூர் இடையே முன்பதிவில்லா சிறப்பு ரயில் நாளை ரத்து

#India #Train #Tamilnews #ImportantNews
Mani
1 year ago
நெல்லை-திருச்செந்தூர் இடையே முன்பதிவில்லா சிறப்பு ரயில் நாளை ரத்து

இது தொடர்பாக வெளியான செய்தி குறிப்பில், "நெல்லை ஜங்ஷன் ரயில் நிலையத்தில் இருந்து காலை 10:40 மணிக்கு புறப்படும் பயணிகள் சிறப்பு ரயில் வண்டி எண் 06675 ஆகஸ்ட் 8 9 ஆகிய நாட்கள் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

திருச்செந்தூர் ரயில் நிலையத்தில் இருந்து மணியாச்சிக்கு 2:30 மணிக்கு புறப்பட்டு செல்லும் சிறப்பு பயணிகள் விரைவு ரயில் வண்டி எண் 06680 ஆகஸ்ட் 8ம் தேதி திருச்செந்தூர் நெல்லை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. ஆகஸ்ட் 9ஆம் தேதி முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

நெல்லையிலிருந்து மதியம் 1:30 மணிக்கு திருச்செந்தூர் செல்லும் பாலக்காடு திருச்செந்தூர் சிறப்பு பயணிகள் விரைவு ரயில் வண்டி எண் 16731 மற்றும் மதியம் 12:20 மணிக்கு திருச்செந்தூரில் புறப்பட்டு பாலக்காடு செல்லும் சிறப்பு பயணிகள் விரைவு ரயில் வண்டி எண் 16732 ஆகிய இரு ரயில்களும் ஆகஸ்ட் 8, 9 ஆகிய நாட்களும் திருச்செந்தூர் கோவில்பட்டி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

மேலும் ஆகஸ்ட் 8ஆம் தேதி வாஞ்சி மணியாச்சி திருச்செந்தூர் சிறப்பு பயணிகள் விரைவு ரயில் வண்டி எண் 06679 மணியாச்சியில் காலை 11:15க்கு புறப்படுவதற்கு பதிலாக மூன்று மணி நேரம் தாமதமாக மதியம் 2:15 மணிக்கு திருச்செந்தூருக்கு புறப்பட்டு செல்லும்.

ஆகஸ்ட் 9ம் தேதி நெல்லை திருச்செந்தூர் பயணிகள் சிறப்பு ரயில் வண்டி எண் 06409 நெல்லையிலிருந்து மாலை 4 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக 2 மணி நேரம் தாமதமாக மாலை 6 மணிக்கு திருச்செந்தூர் புறப்பட்டு செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.