கோவையில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு வரும் 29-ந்தேதி விடுமுறை விடப்பட்டுள்ளது

#India #Festival #Kerala #Coimbatore
Mani
1 year ago
கோவையில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு வரும் 29-ந்தேதி விடுமுறை விடப்பட்டுள்ளது

ஓணம் பண்டிகையை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 29ஆம் தேதி உள்ளூர் விடுமுறையாக அனுசரிக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை வழங்குவது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் வருகிற செப்டம்பர் 2-ம் தேதி சனிக்கிழமை பணிநாளாக செயல்படும் என்று மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.