சுவிட்சர்லாந்து உதைப்பந்தாட்ட போட்டியில் ஒரு கண்ணை இழந்த ரசிகர்

#Switzerland #Eye #Lanka4 #சுவிட்சர்லாந்து #football #லங்கா4 #கண்கள்
சுவிட்சர்லாந்து உதைப்பந்தாட்ட போட்டியில் ஒரு கண்ணை இழந்த ரசிகர்

கடந்த வாரம் இடம்பெற்ற ஒரு உதைப்பந்தாட்ட போட்டியில் இரு குழுக்களின் ரசிகர்களிற்கிடையே ஒரு மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து பொலிஸார் மேற்கொண்ட இறப்பர் துப்பாக்கிச் சூட்டில் குறிப்பிட்ட ஒரு குழுவின் ரசிகரின் கண்ணை அது பதம் பார்த்துள்ளது.

மோதலில் ஈடுப்பட்டோரை கலைக்க பொலிஸார் மேற்கொண்ட இந்த இறப்பர் குண்டுச் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த அந்த ரசிகரின் கண்ணிற்கு சத்ரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. 

இருப்பினும் அந்த சத்ர சிகிச்சையால் அவரிக்கு ஒரு கண் பார்வையே ஏற்பட்டது. இதனால் அதிருப்தி அடைந்த ரசிகர் தனது ஆதாங்கத்தை தெரிவித்த போது, சத்ர சிகிச்சை மேற்கொண்ட வைத்தியர் அதனைப் பார்த்து மீண்டும் ஒரு சத்ர சிகிச்சைக்கு ஒழுங்கு செய்துள்ளனர்.

ஆனால் அந்த இரண்டாவது சத்ர  சிகிச்சை தோல்வியடைந்தால் அவருக்கு தற்போது ஒரு கண் பார்வையே கிடைத்துள்ளது. மேற்கொண்டு பொலிஸாரால் விடுக்கப்பட்ட அறிக்கையில் இது தமது கட்டுப்பாட்டினை மீறி இடம்பெற்ற ஒரு செயல் என தெரிவித்துள்ளனர்.