பிரான்ஸில் ஏற்பட்ட தீ பரவலினால் பல்லாயிரம் பேர் வெளியேற்றம்

#France #people #Lanka4 #heat #மக்கள் #வெப்பமயமாதல் #லங்கா4 #பிரான்ஸ்
பிரான்ஸில் ஏற்பட்ட தீ பரவலினால் பல்லாயிரம் பேர் வெளியேற்றம்

பிரான்ஸின் கிழக்கு கடற்கரை Pyrénées-Orientales மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பலத்த தீ பரவலினால் இதுவரை 3,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

 Saint André, Sorède, மற்றும் Argelè ஆகிய நகர்ப்பகுதிகளில் இந்த தீ பரவி வருவதாகவும், இதுவரை 3,000 பேர் வரை இதுவரை வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 அதேவேளை, அங்கு இதுவரை 530 ஹெக்டேயர் பரப்பளவு தீயில் கருகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 500 தீயணைப்பு படையினர், 13 தீயணைப்பு விமானங்களில் தீயினை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.