பிரான்ஸில் கொவிட் 19க்குப் பின் விமானநிலையங்கள் தற்போது வழமைக்கு திரும்பியுள்ளது

#Covid 19 #France #Airport #Lanka4 #கொவிட்-19 #லங்கா4 #பிரான்ஸ்
பிரான்ஸில் கொவிட் 19க்குப் பின் விமானநிலையங்கள் தற்போது வழமைக்கு திரும்பியுள்ளது

கடந்த 2019 ஆம் ஆண்டின் பின்னர் பரிஸ் விமான நிலையங்களில் போக்குவரத்துக்கள் வழமைக்குத் திரும்பியுள்ளன.

 இவ்வருட ஜூலை மாதத்தில் CGD மற்றும் Orly சர்வதேச விமான நிலையங்களைச் சேர்த்து 9.8 மில்லியன் பயணிகள் பயணித்துள்ளனர். இந்த எண்ணிக்கை முந்தைய ஆண்டு ஜூலையை விட 7.5% சதவீதம் அதிகமாகும்.

 சென்ற 2022 ஆம் ஆண்டில் விமான போக்குவரத்துக்கள் ஓரளவு சீரடைந்துள்ள நிலையில், இவ்வருட கோடையில், கடந்த 2019 ஆம் ஆண்டினை (அதிகபட்ச பயணிகள் பயணித்த ஆண்டு அதுவாகும்) எட்டிப்பிடித்துள்ளதாக விமான நிலையங்களுக்கான கட்டுப்பாட்டு சபை அறிவித்துள்ளது.

 ஓர்லி சர்வதேச விமான நிலையம் ஊடாக 3.2 மில்லியன் பேர் இவ்வாண்டு ஜூலையில் பயணித்துள்ளனர். 2019 ஆம் ஆண்டு ஜூலையுடன் ஒப்பிடுகையில் (103.1%) அதிகமாகும்.