பேரிடர் பாதித்த இமாச்சலப் பிரதேசத்துக்கு ராஜஸ்தான் அரசு ரூ.15 கோடி நிதியுதவி அறிவிப்பு

#India #government #Breakingnews #Disaster #Rajasthan
Mani
1 year ago
பேரிடர் பாதித்த இமாச்சலப் பிரதேசத்துக்கு ராஜஸ்தான் அரசு ரூ.15 கோடி நிதியுதவி அறிவிப்பு

இமாச்சல பிரதேசத்தில் சமீபத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் பேரழிவைச் சந்தித்தது. இதனை சமாளிக்க ராஜஸ்தான் ரூ.15 கோடி வழங்கியுள்ளதாக இமாச்சல பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு தெரிவித்துள்ளார்.

சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் இமாச்சல பிரதேசத்திற்கு ரூ.11 கோடி நிதியுதவி அறிவித்துள்ள நிலையில், ராஜஸ்தான் முதல்வரும் நிதியுதவி அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், "நிதி உதவி வழங்கியதற்காக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டுக்கும், இமாச்சல் மக்களுக்கும் நன்றி தெரிவித்தார். பேரிடர்களால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இந்த உதவி பெரும் உதவியாக இருக்கும்" என்றார்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு போதுமான உதவிகளை உறுதி செய்வதற்காக மாநிலத்தின் பேரிடர் நிவாரண நிதிக்கு தாராளமாக பங்களிக்குமாறு பல அமைப்புகளும் பொதுமக்களும் சுகு வலியுறுத்தினார்.

இமாச்சலப் பேரிடரில் மாநிலத்துக்கு சுமார் 10,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.