பிரான்ஸின் நகரொன்றில் ஏற்பட்ட தீ விபத்தால் 8 பேர் காயம்

#France #Lanka4 #தீ_விபத்து #fire #லங்கா4 #பிரான்ஸ்
பிரான்ஸின் நகரொன்றில் ஏற்பட்ட தீ விபத்தால் 8 பேர் காயம்

நேற்று செவ்வாய்க்கிழமை மாலை Mantes-la-Ville (Yvelines) நகரில் இடம்பெற்ற தீ விபத்து சம்பவம் ஒன்றில் தீயணைப்புபடை வீரர் உட்பட எட்டு பேர் காயமடைந்துள்ளனர்.

 இங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் மாலை 7 மணி அளவில் திடீரென தீ பரவ ஆரம்பித்துள்ளது. உடனடியாக தீயணைப்பு படையினர் அழைக்கப்பட்டனர். சம்பவ இடத்தில் குவிந்த 50 வரையான வீரர்கள், கட்டிடத்துக்குள் சிக்கியிருந்தவர்களை உடனடியாக வெளியேற்றினர்.

 இத்தீவிபத்தில் தீயணைப்புபடை வீரர் உட்பட மொத்தமாக 8 பேர் காயமடைந்துள்ளனர். மூன்று அடுக்கு கட்டிடத்தின் தரை தளத்தில் பரவிய தீ, மிக வேகமாக மேல் தளங்களுக்கும் பரவியது. அதிக வெப்பம் காரணமாக தீ மிக வேகமாக பரவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.