பிரான்ஸின் நகரொன்றில் ஏற்பட்ட தீ விபத்தால் 8 பேர் காயம்

#France #Lanka4 #தீ_விபத்து #fire #லங்கா4 #பிரான்ஸ்
பிரான்ஸின் நகரொன்றில் ஏற்பட்ட தீ விபத்தால் 8 பேர் காயம்

நேற்று செவ்வாய்க்கிழமை மாலை Mantes-la-Ville (Yvelines) நகரில் இடம்பெற்ற தீ விபத்து சம்பவம் ஒன்றில் தீயணைப்புபடை வீரர் உட்பட எட்டு பேர் காயமடைந்துள்ளனர்.

 இங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் மாலை 7 மணி அளவில் திடீரென தீ பரவ ஆரம்பித்துள்ளது. உடனடியாக தீயணைப்பு படையினர் அழைக்கப்பட்டனர். சம்பவ இடத்தில் குவிந்த 50 வரையான வீரர்கள், கட்டிடத்துக்குள் சிக்கியிருந்தவர்களை உடனடியாக வெளியேற்றினர்.

 இத்தீவிபத்தில் தீயணைப்புபடை வீரர் உட்பட மொத்தமாக 8 பேர் காயமடைந்துள்ளனர். மூன்று அடுக்கு கட்டிடத்தின் தரை தளத்தில் பரவிய தீ, மிக வேகமாக மேல் தளங்களுக்கும் பரவியது. அதிக வெப்பம் காரணமாக தீ மிக வேகமாக பரவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4