ஜேர்மனியில் ஆழங்கட்டி மழை : கட்டடங்கள் சேதம்!
#Lanka4
#Germany
Thamilini
2 years ago
தெற்கு ஜேர்மனியின் பவேரியா மாகாணத்தில் உள்ள ஒரு சிறிய நகரத்தில் ஆழங்கட்டி மழை பெய்துள்ளது.
குறித்த மழையினால் அங்குள்ள கட்டடங்கள் சேதமடைந்துள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
பவேரியாவின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள கிஸ்ஸிங் என்னும் நகரில், கூடாரம் ஒன்றைப் போட முயன்றவர்கள் 12 பேர் ஆழங்கட்டி மழையால் காயமடைந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும் குறித்த சம்பவத்தால் உயிரிழப்புகள் ஏற்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.