பிரான்ஸிலுள்ள உணவகத்தில் சூடை மீன் உட்கொண்ட பெண் உயிரிழந்துள்ளார்

#France #Fish #Hotel #Lanka4 #உணவு #பெண் #லங்கா4 #மீன் #பிரான்ஸ் #France Tamil News #Tamil News
பிரான்ஸிலுள்ள உணவகத்தில் சூடை மீன் உட்கொண்ட பெண் உயிரிழந்துள்ளார்

Bordeaux நகரில் உள்ள Tchin Tchin Wine Bar என்னும் உணவகத்தில் கடந்த நான்காம் திகதி முதல் பத்தாம் திகதி வரை "sardines en bocal" (கண்ணாடிக் குவளையில் பதப்படுத்தப்பட்டு அடைக்கப்பட்ட சூடைமீன்) உணவை எடுத்துக் கொண்டுவர்களில் parisசை சேர்ந்த ஒருபெண் பலியாக ஒன்பது பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 இந்த தகவலை l'Agence régionale de santé (ARS) தெரிவித்துள்ளது. குறித்த உணவகத்தில் குறித்த காலப் பகுதியில் உணவருந்தியவர்கள் மிகவும் விழிப்பாக இருக்கும்படியும் l'Agence régionale de santé (ARS) கேட்டுக்கொண்டுள்ளது.

 அமெரிக்கா, கனடா, ஜெர்மன் போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்களும் Paris மற்றும் Bordeaux மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட ஒன்பது பேரில் அடங்குவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த உணவில் இருந்து பற்றிக் கொண்ட கிருமிகளே அவர்களின் நோய்க்கும், மரணத்துக்கும் காரணம் என ARS நிறுவனம் தெரிவித்துள்ளது.