கடன் சுமையில் வலுவான தாக்கத்தை ஏற்படுத்திய டொலரின் பெறுமதி அதிகரிப்பு

#SriLanka #Dollar #Ranjith Siambalapitiya
Prathees
2 years ago
கடன் சுமையில் வலுவான தாக்கத்தை ஏற்படுத்திய டொலரின் பெறுமதி அதிகரிப்பு

டொலரின் பெறுமதி அதிகரிப்பானது குடும்ப அலகு ஒன்றின் கடன் சுமையில் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தியதாக பதில் நிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

 அரசாங்கத்தின் கடனை செலுத்தும் திறனை வளர்ப்பதே இப்போது முக்கியமானது என பதில் நிதியமைச்சர் தெரிவித்தார். 

 ருவன்வெல்ல பிரதேசத்தில் இன்று காலை இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

 சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது கடன் தவணையை பெற்றுக்கொள்வதற்கான பேச்சுவார்த்தை வெற்றிகரமாக நடைபெற்று வருவதாக பதில் நிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மேலும் தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4