ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உட்பட ஐந்து பேரை வைத்திசாலைக்கு அனுப்பிய விபத்து

#SriLanka #Accident #Hospital
Prathees
1 year ago
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உட்பட ஐந்து பேரை வைத்திசாலைக்கு அனுப்பிய விபத்து

நாத்தாண்டி - நீர்கொழும்பு பிரதான வீதியில் தும்மோதர ஹெமில்டன் கால்வாயின் குறுக்கே நிர்மாணிக்கப்பட்டு வரும் பாலத்தின் மீது கார் ஒன்று டிப்பர் ரக வாகனத்துடன் மோதி ஹமில்டன் கால்வாயில் கவிழ்ந்தது.

 இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வரும் மற்றுமொருவரும் காயமடைந்து மாரவில ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 அதிவேகமாக வந்த இந்த டிப்பர் வாகனம் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் ஹமில்டன் கால்வாயில் கவிழ்ந்த காருடன் மோதியதில் மற்றுமொரு கார் மற்றும் மோட்டார் சைக்கிள் அபாயகரமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 இந்த விபத்து கடந்த 28ஆம் திகதி இரவு 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. விபத்தில் காரில் பயணித்த தாய், தந்தை மற்றும் 17 மற்றும் 22 வயதுடைய இரண்டு மகள்கள் மற்றும் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 நாத்தன்டியா பகுதியில் இருந்து கேகாலை பகுதியை நோக்கி பயணித்த கார் விபத்துக்குள்ளானது.

 எதிரே வந்த டிப்பர் வாகனம் ஒன்று கார் மீது மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. கார் பலத்த சேதமடைந்தது.

 டிப்பர் சாரதி குடித்துவிட்டு அதிவேகமாக வாகனத்தை செலுத்தியதால் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக மாரவில பொலிஸ் போக்குவரத்து திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!