இறுதி வீரவணக்க நிகழ்வு : மாவீரர்களை அடையாளப்படுத்தல் தொடர்பானது!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
6 months ago
இறுதி வீரவணக்க நிகழ்வு : மாவீரர்களை அடையாளப்படுத்தல் தொடர்பானது!

இறுதி யுத்தத்தின் போது, கொண்ட லட்சியம் குன்றிடாது, தானை தலைவன் வழி நின்று, களமாடி வீர காவியமான மாவீரர்களில், அடையாளப்படுத்தாமல் இருந்த 20 மாவீரர்களை, கடந்த காலங்கள் போல் இவ்வாண்டும் உறுதிப்படுத்தி அடையாளப்படுத்தியுள்ளோம். 

அவ்வாறு உறுதிப்படுத்தப்பட்டு வீரவணக்க நிகழ்வு நடைபெற உள்ளது. சிறப்பாக இவ்வாண்டு சர்வதேச ரீதியாக எம் உறவுகள் செறிந்து வாழும் சுவிசர்லாந்து, பிரித்தானியா, பிரான்ஸ், அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இறுதி வணக்க நிகழ்வு எதிர்வரும் 22.10.2023 ஞாயிற்றுக்கிழமை உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2.00 மணிக்கு சம நேரத்தில் நடைபெறக்கூடியதாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

images/content-image/1697723794.jpg

இவ்வீரவணக்க நிகழ்வில் கலந்துகொண்டு எமது வீர மறவர்களுக்கு இறுதி வணக்கம் செலுத்தும் படி உங்களை கேட்டுக் கொள்கின்றோம்.  

மேற்படி நிகழ்வுகள் நடைபெறும் இடங்களின் விபரங்கள் இணைக்கப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்து: 

AULA SAAL Zurcherstrasse 89 5432 Neuenhof Switzerland 0041789650918

பிரான்ஸ் 

Salle Jeanne d'arc 50 Rue de Torcy 75018 Paris France 0033768498388

அவுஸ்திரேலியா:

 Brigade House 3, Junia Avenue Toongabbie NSW 2148 Australia 0061470215595

பிரித்தானியா:

 உலகத் தமிழர் வரலாற்று மையம் Mill Lane, Banbury Oxford OX17 3QP United Kingdom 00447983337797