சீனாவில் இருந்து மீன்களை இறக்குமதி செய்வது பிரச்சினைக்குரியது : மீனவர் சங்கம் வலியுறுத்தல்!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
சீனாவில் இருந்து மீன்களை இறக்குமதி செய்வது பிரச்சினைக்குரியது : மீனவர் சங்கம் வலியுறுத்தல்!

கடற்றொழில் அமைச்சு சீனாவில் இருந்து மீன்களை இறக்குமதி செய்வது பிரச்சினைக்குரியது என அகில இலங்கை மீனவர் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.  

மீன்பிடி அமைச்சு முறையான கொள்முதல் நடவடிக்கையின்றி 12,000 கிலோவுக்கும் அதிகமான மீன்களை இறக்குமதி செய்துள்ளதாக மீனவர் சங்கங்களின் தேசிய அமைப்பாளர் ரத்ன கமகே குறிப்பிட்டுள்ளார்.  

பலபிட்டியவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்படி தெரிவித்துள்ளார். 

மீனவர்களின் குற்றச்சாட்டு தொடர்பில், மீனவர்களுக்கு எவ்வித பிரச்சினையும் ஏற்படாத வகையிலும், நுகர்வோருக்கு நன்மை ஏற்படும் வகையிலும் தீர்வு காணப்படும் என உறுதியளித்துள்ளார். 

மேலும், சிலர் தனியாரால் மீன்களை இறக்குமதி செய்து தரத்தில் குறைவின்றி அதிக விலைக்கு மீன்களை விற்பனை செய்வதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!