வெளிநாட்டு கடனை மீள செலுத்த வசூலிக்கப்பட்ட தொகை அதிகரிப்பு!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
வெளிநாட்டு கடனை மீள செலுத்த வசூலிக்கப்பட்ட தொகை அதிகரிப்பு!

அரசாங்கம் வெளிநாட்டுக் கடனை செலுத்துவதை இடைநிறுத்தியுள்ள நிலையில், 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி வரை மீளச் செலுத்துவதற்காக வசூலிக்கப்பட்டுள்ள வெளிநாட்டுக் கடன் தொகை 3.68 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது. 

செலுத்த வேண்டிய வட்டித் தொகை 1301 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளதாக   இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

 ஏப்ரல் 12, 2022 முதல், அரசாங்கம் வெளிநாட்டுக் கடன் வைத்திருப்பவர்களுக்கு பணம் செலுத்துவதை நிறுத்தியது. அந்த திகதியிலிருந்து ஏப்ரல் 2023 இறுதி வரை, வெளிநாட்டு கடன் தவணைகளின் நிலுவைத் தொகை 3691 மில்லியன் டொலர்களாக பதிவாகியுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4