வாஷிங்டனில் வேகமாக பரவி வரும் காட்டுத்தீ காரணமாக அவசர நிலை அறிவிப்பு

#America #Lanka4 #StateOfEmergency #WildFire #evacuate #L4
Prasu
1 hour ago
வாஷிங்டனில் வேகமாக பரவி வரும் காட்டுத்தீ காரணமாக அவசர நிலை அறிவிப்பு

அமெரிக்காவின் வொஷிங்டனில் வேகமாக பரவி வரும் காட்டுத்தீ காரணமாக சுமார் 4000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

ஸ்போகேன் பகுதியில் பரவலான வெளியேற்றங்களும் மின்சாரத் தடைகளும் ஏற்பட்டுள்ளதாக மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மாநிலம் முழுவதும் பத்துக்கும் மேற்பட்ட தீயணைப்புப் பணிகளில் சுமார் 4,000 பேர் ஈடுபட்டுள்ளதாக, மாநிலத்தின் பொது நிலங்களுக்கான ஆணையர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் ஆளுனர் ர் பாப் பெர்குசன் மாநிலம் தழுவிய அவசரநிலையையும் தீயணைப்புத் தடையையும் அறிவித்துள்ளார். மேலும் குறித்த தீ விபத்தில் ஏற்பட்ட சேத விபரங்கள் உடனடியாக வெளியாகவில்லை.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4