பொலிஸ் மா அதிபருக்கான சேவை நீடிப்பு நிறைவு!

#SriLanka #Sri Lanka President #Police
Mayoorikka
2 years ago
பொலிஸ் மா அதிபருக்கான சேவை நீடிப்பு நிறைவு!

பொலிஸ் மா அதிபராக விக்கிரமரத்னவுக்கு வழங்கப்பட்ட மூன்று வாரகால சேவை நீடிப்பு நவம்பர் 2 ஆம் திகதியுடன் நிறைவடைகிறது.

 ஆனால், புதிய பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட வேண்டியவர்களின் பெயர்கள் அரசியலமைப்பு பேரவைக்கு முன்மொழியப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 விக்கிரமரத்னவுக்கு சேவை நீடிப்பு மூன்று தடவைகள் வழங்கப்பட்டுள்ளதுடன் மூன்றாவது சேவை நீடிப்பு அரசியலமைப்பு பேரவை அங்கீகரிக்கரிக்கவில்லை இதனையடுத்து ஜனாதிபதியினால் சேவை நீடிப்பு வழங்கப்பட்டது.

 இந்நிலையில், தேஷ்பந்து தென்னகோன், லலித் பதிநாயக்க மற்றும் நிலந்த ஜயவர்தன ஆகியோர் பொலிஸ் மா அதிபர் பதவிக்கு தகுதி பெற்றுள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4